சரிந்த மல்லிகைப் பூக்களின் விலை : விவசாயிகள் வேதனை

வள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை பூவின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளான பழவூர், குமாரபுரம், காவல்கிணறு, வடக்கன்குளம், பணகுடி போன்ற பல்வேறு பகுதிகளில் மல்லிகைப் பூ பயிரிட்டு வருகிறார்கள். மல்லிகைப்பூவின் விளைச்சல் அதிகரித்ததால், மல்லிகைப்பூவுக்கு உரிய விலை கிடைக்காமல் சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு, மல்லிகைப்பூ 1 கிலோ 400 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மல்லிகை பூ தற்போது பெரும் சரிவை சந்தித்து, ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மல்லிகைப்பூவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version