வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில், இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழை பெய்யும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில், வெப்பச் சலனம் காரணமாக இன்றும் நாளையும் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version