வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புதிய புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘புல் புல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, மீனவர்கள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று முதல் 10ம் தேதி வரை வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்த வரையில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version