சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு : அமைச்சர் தர்மேந்திர பிரதான்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வரும் மாதங்களில் குறையக்கூடும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 2 நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலத்த்திற்கு சென்றுள்ளார். ராய்ப்பூர் விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறுவது உண்மையல்ல என்றும், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாகவே, இந்த மாதத்தில் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாகவும் கூறினார். மார்ச் மாதத்தில் அதன் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

குளிர்காலங்களில், சமையல் எரிவாயுவின் பயன்பாடு அதிகரிப்பால், தேவை அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டதால், விலை உயர்ந்ததாக விளக்கமளித்த அவர், அடுத்த மாதம் விலை குறையும் என கூறினார்.

Exit mobile version