வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் குறைந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version