அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இதனிடையே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதாகவும் இதனால் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் 7, 8-ம் தேதி குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 10-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசானது வரையிலும், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மேகமூட்டம் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

Exit mobile version