தமிழகத்தை பானி புயல் தாக்க வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்

வங்கக்கடலில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறும் வாய்ப்பிருப்பதால், நாளை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம், என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது, வரும் 27,28 ம் தேதிகளில் புயலாக மாறும் வாய்ப்பிருப்பதால், நாளை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தமிழகத்தை நோக்கி வரும் இந்த புயலுக்கு பானி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், புயலானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version