தேர்தலையொட்டி ப்ரோசோன் மால் மூடப்படும் – நிர்வாகம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் மால், நாளை மூடப்படும் என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் ப்ரோசோன் மால் இயங்கி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், காலை முதல் மாலை வரை மால் மூட உள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை நேரத்தில், ப்ரோசோன் மாலுக்கு வரும் பொதுமக்கள் வாக்களித்ததற்கான அடையாள மையைக் காண்பித்தால், வியாழன் மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version