தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரத்தோடு, அழியாத மை, வாக்காளர் பட்டியல், பேனா, பென்சில், மெழுகுவர்த்தி, பூத் சிலிப், ஸ்கேல், அரக்கு உள்ளிட்ட 100 பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 294 வாக்கு சாவடிகளுக்கும் வாக்குபதிவு இயந்திரத்தோடு 100 பொருட்களை அனுப்பும் பணி நடைபெற்றது. திருவெறும்பூர் தொகுதியில்179 வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

Exit mobile version