திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த காவலர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆயுத படை காவலர் மீது அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

அடைக்கலபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும், ஆயுதப் படை காவல் ஜாக்சனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் காரில் சென்றபோது அந்தப் பெண்ணிடம் ஜாக்சன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஜாக்சன் மறுத்துள்ளார். இதுகுறித்து, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜாக்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், காவலர் ஜாக்சன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெண்ணின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Exit mobile version