பாக். விமானத்தை வீழ்த்தும் பணியில் ஈடுபட்ட வீரர் திரும்பவில்லை

பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர் திரும்பவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தானின் F 16 ரக போர் விமானம் ஒன்றை இந்திய விமானப் படை காஷ்மீரின் ரஜோரியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட, MiG 21 ரக இந்திய போர் விமானம் மற்றும் விமானி திரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். விமானி அபிநந்தனை சிறைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் கூறி வருவதாகவும், இதுகுறித்து இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமான தகவலை பாகிஸ்தான் இதுவரை அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கூற்றில் உண்மை உள்ளதா என்பதை உறுதிபடுத்தி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version