பிளாஸ்டிக் தடையால் பொதுமக்களுக்கு எவர்சில்வர் பாத்திரம் வழங்கிய இறைச்சி கடைக்காரர்

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால், பொதுமக்களுக்கு எவர் சில்வர் பாத்திரம் வழங்கி இறைச்சி கடைக்காரர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

நாமக்கல் மாவட்டம், ஜெட்டிக்குளத் தெரு பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரன் என்பவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையை முன்னிட்டு பைகள் கொண்டு வராத வாடிக்கையாளர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்களை வழங்குகிறார். அடுத்த முறை வரும் போது திரும்ப பாத்திரங்களை ஒப்படைக்கவும் அவர் கேட்டுக் கொள்கிறார். இந்த நடைமுறைக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் தனக்கு மாதம் ஒன்றிற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மீதமாவதாக புவனேஸ்வரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Exit mobile version