கிருஷ்ணகிரியில் பனைமரத்தில் ஏறிய தொழிலாளி திடீரென உயிரிழந்தார்

கிருஷ்ணகிரியில் பனைமரத்தில் ஏறிய தொழிலாளி மரத்திலேயே உயிரிழந்து தலைகீழாக தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூர் பகுதியில் உள்ள பனை மரங்களில் நூற்றுக்கணக்கானோர் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சனூரை சேர்ந்த கணேசன் என்பவர் பதநீர் சேகரிக்க பனை மரம் ஏறியுள்ளார். பனை உச்சியில் அவர் இருந்த போது திடீரென அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர், மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மரத்தில் இருந்து கணேசனின் உடலை கீழே இறக்கினர். பதநீர் இறக்க பனை மரம் ஏறியவர், சடலமாக இறங்கியது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version