சேலத்தில் மழை வேண்டி பன்றியை பலி கொடுத்து வழிபாடு

ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.செட்டியபட்டியை சேர்ந்த மக்கள் எல்லை பிடாரி அம்மனுக்கு பன்றியை பலி கொடுக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பன்றியை மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வந்த அவர்கள், வேட்டை நாய்களை கொண்டு அம்மனுக்கு பலி கொடுத்தனர். இவ்வாறு பலி கொடுப்பதால் மழை பெய்து வளம் செழிக்கும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Exit mobile version