வாக்குப்பதிவு இயந்திரத்தை தவறாக கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியும் என கூறியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி போலீசாரிடம் தலைமை தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. லண்டனில் ஐரோப்பாவுக்கான இந்திய பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்ட, சையது சுஜா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சையது சுஜாவின் குற்றச்சாட்டு, இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என கூறிய சையது சுஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி போலீசாரிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் புகார் மனு அளித்துள்ளது.

Exit mobile version