ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தான் கைது செய்யப்படாமல் இருக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு காலக்கட்டத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கான இடைக்கால தடையை நீடித்தது.

இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

Exit mobile version