4 தொகுதிகளுக்கு இன்று விருப்ப மனு அளிக்கலாம் : அதிமுக தலைமை கழகம்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இன்று விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே மாதம் 19 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 தொகுதிகளுக்கும் இன்று விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதையொட்டி, இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version