பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது

பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்த அர்ஜென்டீனா நாட்டின் அதிபர் மொரீசியோ மேக்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதை காட்டுவதாக கூறினார். தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவது அதை ஊக்குவிப்பதற்கு சமம் என்று சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

Exit mobile version