திமுகவினரின் பொய் பிரசாரங்களை மக்களிடம் புரிய வைக்க வேண்டும்: அமைச்சர் தங்கமணி

திமுகவினரின் பொய் பிரசாரங்களை மக்களிடம் புரிய வைக்க வேண்டும் நாமக்கல்  அதிமுகவினருக்கு அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கியுள்ளார்.

நாமக்கலில் நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, கழக நிர்வாகிகளுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.

மார்ச் 5-ம் தேதி நாமக்கலில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில், கலந்து கொள்ள வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒரு வாரத்திற்கு சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய் பிரச்சாரங்களை செய்து வரும் திமுகவைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி விளக்க வேண்டுமென நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version