பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கினை பதிவு செய்யும் வகையில் பொள்ளாச்சியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மகாலிங்கபுரம் பகுதியில் துவங்கிய பேரணி புதிய திட்ட சாலை, கடைவீதி வெங்கட்ரமணன் வீதி, மத்திய பேருந்து நிலையம் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்த அணிவகுப்பில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Exit mobile version