நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று துவங்கியது. இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து மரபுப்படி படை வீரர்களின் அணிவகுப்புடன் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் சென்றார்.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

பிரதமர் மோடி நம்பிக்கை

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் என்றார்.

Exit mobile version