ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான்

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான் என உளவுத்துறை தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் மற்றும் உளவுத்துறை தகவல்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதற்கிடையே லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலில் புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான் என தெரியவந்துள்ளது.

Exit mobile version