சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் மருத்துவமனையில் காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் மருத்துவமனையில் காலமானார்.

சரவண பவன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த மேலாளர் ராமசாமியின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை 2001ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்தார். இந்த வழக்கில், சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேருக்கு, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்து, உடனடியாக சரணடையுமாறு கூறியது.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால், ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் தேதி ஆஜரானார். அப்போது, புழல் சிறையில் அடைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஸாடன்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், ராஜகோபாலின் மகன் சரவணன், தனது தந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Exit mobile version