பிரபல லஷ்மணன் ஸ்ருதியின் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

பிரபல லஷ்மண் ஸ்ருதியின் உரிமையாளர் உடல்நலக் குறைவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னை அஷோக் நகரில் , லஷ்மன் ஸ்ருதி என்னும்   இசைக் கருவிகள் விற்பனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளரான ராமன் தனது குடும்பத்துடன் கோடம்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து  இசை குழுவையும் நடத்தி வந்தார்…

ராமன் நெஞ்சு வலி மற்றும் பிற உடல் உபாதைகளால் கடந்த ஒரு வார காலமாக அவதியடைந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேனாம்பேட்டையில் நடைபெற்ற  ‘ சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியிலிருந்து ராமன்   தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு  சென்ற அவர்  வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராமன்   மின் விசிறியில் தூக்கில் தொங்கியப் படி பிணமாக கிடந்துள்ளார்.  லஷ்மண் சுருதி ராமனின்  மர்ம மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Exit mobile version