அனைத்து சிறைகளிலும் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப உத்தரவிட்டு சிறை கண்காணிப்பாளர்களுக்கு சிறைத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன், சிறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரவிச்சந்திரன் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள், மாவட்ட சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகிய சிறைகளில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இதர பொழுதுபோக்கு தமிழ் சேனல்களை ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிறை கண்காணிப்பாளர்களுக்கு, சிறைத் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், செய்தி சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்றும், இதற்கான செலவீனத்தை சிறைவாசிகளின் தேனீர் விடுதி லாப கணக்கில் இருந்து மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version