மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
143 அடி கொள்ளவு கொண்ட பாபாநசம் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்தநிலையில், விநாடிக்கு 8 ஆயிரத்து 670 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 14 ஆயிரத்து 270 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 3வது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.