திருச்சியில் இன்று முதல் "தலைக்கவசம்" அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் என அறிவிப்பு

திருச்சியில் இன்று முதல் “தலைக்கவசம்” அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் நீதிமன்ற உத்தரவை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஐ.ஓ.சி. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் வழங்கப்படாது என்று தெரிவிக்கும் வகையில் ‘நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்’ என்ற ஆங்கில வாசகங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த விதிமுறைகள் திருச்சியில் அமலுக்கு வந்துள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version