சென்னையில் தீப்பிடித்து எரிந்த குடிசைக்குள் சிக்கிய முதியவர் மரணம்

சென்னை பல்லாவரம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உடல் கருகி பலியானார்.

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகரில் 75 வயதான ஞானபிரகாசம் என்பவர் தனது மனைவியுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தியை கொளுத்தியுள்ளனர். இதனிடையே மனைவி கடைக்கு சென்றதால் வீட்டில் ஞானபிரகாசம் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஞானபிரகாசம் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து 50 சதவீத தீ காயத்துடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Exit mobile version