டிடிவி தினகரனின் நிகழ்ச்சிக்கு வந்த மூதாட்டிக்கு கால் உடைந்தது

முசிறி காவல்நிலையம் அருகே உள்ள அமமுக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தினகரன் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பணம் கொடுத்து மக்களை அழைத்து வந்ததாக அதில் பங்கேற்றவர்கள் கூறினர்.  மங்கலம்புதூரை சேர்ந்த பேராயி என்ற 70 வயது மூதாட்டி நிகழ்ச்சியை  காண வந்தார். அப்போது கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பெட்டி சரிந்து பேராயி மீது விழுந்தது.

 இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மூதாட்டி பேராயியை முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அமமுகவை சேர்ந்த யாரும் அவருக்கு உதவ முன்வராத சம்பவம் அப்பகுதி மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், போதிய முன்னேற்பாடுகள் செய்யாததே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

 

 

 

 

Exit mobile version