கேரளாவின் வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம், வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சபரிமலையில் கடந்த 2ம் தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து கேரளாவில் நடந்த பயங்கர வன்முறையில் பாஜக தொண்டர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், கண்ணூர், திருவெங்காடு, தலச்சேரி உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வீசி தாக்குதல் மற்றும் வன்முறை நீடித்து வருவதால், பல்வேறு இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைக்காக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து லட்சக்கணக்கானோர் சபரிமலை செல்வது வழக்கமாக உள்ளது. இந்து அமைப்புகள் நடத்தும் போராட்டம் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Exit mobile version