9 நாட்கள் நடைப்பெற உள்ள நவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்

நவராத்திரி திருவிழாவின் தொடக்கமான இன்று மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களின் திருவிழாவான நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி மும்பையில் உள்ள மும்பாதேவி கோவிலில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். நடை திறந்தபின் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த மும்பாதேவியைக் கண்டு வழிபட்டனர். நவராத்திரி தொடக்கத்தையொட்டி அம்மனுக்குச் சிறப்பு அபிசேகமும் ஆராதனையும் நடைபெற்றன.

 

Exit mobile version