கமல்ஹாசனுக்கு எதிரான மனு நாளை மறுநாள் விசாரணை

நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், தேச தந்தையான மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேயை நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் சார்பில் குற்றவழக்கு பதிவு செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்து சேனா அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அந்த மனுவில், இந்து மதத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு பேசி இந்துக்களின் மனதை புண்படுத்திய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version