அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் -வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால் அதிகமான மழைப்பொழிவு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திலும் மழைப்பொழிவு இருக்காது என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், குமரி மாவட்டம் களியல், புத்தன் அணை மற்றும் பெருஞ்சாணி ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version