அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்தது

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியும் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்காக அதிமுக தலைமையில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அறிவித்துள்ளன. தேமுதிகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. சென்னையில் அதிமுக தலைமையகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுகவிற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version