புதிய உச்சத்தை தொட்டது இந்தியப் பங்குச்சந்தை!

இந்தியப் பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டு, புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் பன்னிரண்டரை மணி நிலவரப்படி 140 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 698 ஆக இருந்தது. மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் இது புதிய உச்சமாகும். தேசியப் பங்குச்சந்தையான நிப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 259 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை வரலாற்றிலும் இது புதிய உச்சமாகும். மகிந்திரா, ஐச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், டாட்டா கன்சல்டன்சி, டாட்டா மோட்டார்ஸ் ஆகிய மோட்டார் வாகன நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டார்கள் ஆர்வத்துடன் வாங்கியதால் அவற்றின் பங்கு விலைகள் 2 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தன.

Exit mobile version