அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

அதிமுக தலைமை அலுவலகத்தில், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் இரட்டை இலைச் சின்னத்திலேயே அக்கட்சி போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி சண்முகம் நாற்பது தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடப் போவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில்  தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் நடிகர் ரவி மரியாஅதிமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யப் போவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version