பயணிகளிடையே வரவேற்பை பெற்ற புதிய பேருந்து நிலையம்!

சென்னை மாதவரத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மாதவரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். வழக்கமாக பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டது.

தற்போது ஆந்திரா, தெலங்கானா, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கோயம்பேட்டிற்கு பதிலாக, மாதவரத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இதற்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த பேருந்து நிலையத்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாகவும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

Exit mobile version