சரபங்கா ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலம் 8ம் தேதி திறப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி சரபங்கா ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலத்தை வரும் 8ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதையடுத்து கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் முதல் கவுண்டம்பட்டி வரை சரபங்க ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பில் அரசு சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பழனிசாமி வரும் 8ம் தேதி திறந்து வைக்கிறார். அன்றைய தினமே எடப்பாடியில் புதிதாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கருவூலத்தையும் திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி, கட்டி முடிக்கப்பட்ட புதிய பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Exit mobile version