நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: ரவிக்குமார், அவருடைய மகன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவருடைய மகன் இருவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில், ரவிக்குமார் மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளித்து வருகிறார்கள்.

Exit mobile version