அனிமேஷன் ஸ்டூடியோவை தீ வைத்து எரித்த மர்மநபர்

ஜப்பானின் கியோட்டோ மாகாணத்தில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவை மர்ம நபர் தீ வைத்து எரித்ததில் 33க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கியோட்டோவில் உள்ள ஸ்டியோவிற்குள் நுழைந்த மர்ம நபர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் தீ வேகமாக கட்டிடத்தின் 3 தளங்களுக்கும் பரவியது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தில் இருந்த 33 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கட்டிடத்திற்கு தீ வைத்த மர்ம நபரைக் கைது செய்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version