ஓசூரில் காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்

காதல் திருமணம் செய்த பெண்ணின் மர்ம மரணம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியைச் சேர்ந்த கார்த்திகா, காளியப்பன் ஆகியோர் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஓசூரில் தங்கியிருந்த நிலையில், கார்த்திகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கார்த்திகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உற்வினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காளியப்பனும் அவர்களது நண்பர்களும், கார்த்திகாவை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version