தேயிலை தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கரடி

நீலகிரி அருகே தேயிலை தோட்டத்தில் மர்மமான முறையில் கரடி உயிரிழந்து கிடந்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரத்தில் நிலவும் வறட்சி காரணமாக அண்மைக்காலமாக வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதியில் வலம் வருகின்றன. இந்நிலையில் சோகத்தொரை சாலையில் தேயிலை தோட்டத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் கரடி ஒன்று விழுந்து கிடந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் குழுவினர் ஆய்வு செய்ததில், கரடி உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த பெண்கரடிக்கு 3 வயது ஆவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கரடியின் இறப்பில் இருக்கும் மர்மம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version