பீகாரில் போக்குவரத்து காவலரை தாக்கிய மர்ம கும்பல்

பீகார் மாநிலம் முசாபர்பூரில் போக்குவரத்து காவலர் ஒருவரை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி ஆட்டோவை ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுநரை போக்குவரத்து காவலர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் வந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் காவலரை தாக்கியுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version