திமுக தலைமைக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியுள்ள கொலை சம்பவம்…

அரியலூரில் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்பட்டுள்ளது. கள்ளூர் பாலம் அருகே கடந்த சிலநாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் என்பவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அருங்கால் கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.

இதனால் காவல்துறையினருக்கு பயந்து அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிவேலின் மகன், மற்றும் ஜோதிவேலின் இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோதிவேல் மீது திமுக தலைமை நிர்வாகம், கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் சார்பில் அரியலூர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version