சிறுபான்மையினரை நேசிக்கின்ற இயக்கம் அதிமுகதான் – அமைச்சர் ஜெயக்குமார்

இஸ்லாமியர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அதிமுக அரசு, அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக கடலோர பகுதிகளில் பேரிடர் காலங்களில், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து மேடை நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் ஜெயக்குமார் டிரம்ஸ் இசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவது அதிமுக அரசுதான் என்றும், சிறுபான்மையினரை நேசிக்கின்ற இயக்கம் அதிமுகதான் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

Exit mobile version