திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வனப்பகுதிக்குள் நுழைய முயன்ற கும்பல்

திருப்பதி அருகே கரகம்பாடி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக நுழைய முயன்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். திருப்பதியில் இயங்கி வரும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், கரகம்பாடி வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் வனப்பகுதிக்குள் நுழைவதை கண்ட போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.

போலீசாரை கண்ட அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளை வீசிவிட்டு தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்த போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த மரம் அறுக்கும் உபகரணங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version