வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்த கும்பலை கைது செய்த காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மருத்துவராக பணிபுரியும் சத்திவேல் என்பவர் அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மினி வேனில் வந்த கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து தாக்கியதுடன், பணம் மற்றும் 2 செல்ஃபோன்களை வழிப்பறி செய்து தப்பியோடியது. இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், வீரபாண்டி, ஆறுமுகம் மற்றும் முனீஸ்கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். புகாரை பெற்றுகொண்ட 3 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Exit mobile version