அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டத்தில் 50 ஆண்டுகால வளார்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். அனைவர் குடும்பத்திலும், அதிமுக அரசின் ஏதாவது ஒரு திட்டம் இருக்கும் என்றும், அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பாக எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இன்று தமிழகத்தை முதலமைச்சர் முதன்மை மாநிலமாக கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு சிறப்பாக நிறைவேற்றி தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 103 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவிற்கு தமிழகத்தை வளர்ச்சி பெறும் மாநிலமாக முதலைமைச்சர் ஆட்சி செய்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மத்திய அரசின் பல விருதுகளை குவித்துக்கொண்டு வருவதாகவும், கூறியுள்ளார். இதனையடுத்து நடந்த விழாவில், தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Exit mobile version