தொடர் நீர்வரத்தின் காரணமாக 50 அடியை தொட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம்

தொடர் நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81 நாட்களுக்கு பிறகு 50 அடியை தொட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 81 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 50 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் 10000 கன அடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2000 கனஅடியாகவும் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version