காரில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம கும்பல்

ராமநாதபுரத்தில், சொகுசு காரில் வந்து 8 ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது தொடர்ச்சியாக ஆடுகள் திருடப்படுவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில், வழுதூர் பகுதியில், கடந்த 28 ம் தேதி, ஒரே நாளில் 8 ஆடுகள் திருடப்பட்டதாக கேணிக்கரை போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கரூர் பதிவெண் கொண்ட இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரோட்டில் அமர்ந்திருந்த ஆட்டை, மின்னல் வேகத்தில் காருக்குள் தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஆடு திருடும் கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version